பறவைகளின் வருகை இரட்டிப்பாக அதிகரிப்பு

பறவைகளின் வருகை இரட்டிப்பாக அதிகரிப்பு.பறவைகள் நல ஆர்வலர்கள் தகவல்
பறவைகளின் வருகை இரட்டிப்பாக அதிகரிப்பு
x
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரட்டிப்பாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு வனத்துறை சார்பாக கடந்த இரண்டு தினங்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. கடல் ஆலா, கடல் புறா, மணல் உள்ளான், செங்கால் உள்ளான், பழுப்பு நாரை என பல பறவையினங்கள் இந்த கணக்கெடுப்பில் இடம்பெற்றன. இந்த கணக்கெடுப்பில், கடந்த ஆண்டை காட்டிலும் பறவைகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளதாக பறவைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்