சென்னை - திருச்சி இடையே இடைநில்லா ரயில் சேவை

சென்னை - திருச்சி இடையே இடைநில்லா ரயில் சேவை - தேஜஸ் ரயில் சேவை விரைவில் துவங்கப்படும் என தகவல்
சென்னை - திருச்சி இடையே இடைநில்லா ரயில் சேவை
x
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரையிலான பாயிண்ட் டூ பாயிண்ட் எனப்படும் இடைநில்லா ரயில் இயக்கப்பட உள்ளது. தேஜஸ் ரயில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில், வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் செயல்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயிலானது, திருச்சிக்கு காலை 10.23 மணிக்கு சென்றடையும். தொடர்ந்து மதுரைக்கும் இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 பெட்டிகளை கொண்ட இந்த விரைவு ரயிலானது இந்தியாவின் இரண்டாவது தேஜஸ் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 19ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ள நிலையில், இதற்கான கட்டணம் சேவை தொடங்கப்படும் நாளில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்