முடி திருத்தக்கடையில் ஒரு நூலகம்...!

முடி திருத்தக்கடையில் ஒரு நூலகம் அமைத்து நடத்திய வரும் இளைஞர், வாடிக்கையாளர்கள் உள்பட அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
x
மில்லர்புரத்தில் 5 ஆண்டுகளுக்கு முடி திருத்தக்கடையை நடத்தி வருகிறார் பொன் மாரியப்பன். 8ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், குடும்ப வறுமை காரணமாக பரம்பரை தொழிலை கையிலெடுத்துள்ளார். எனினும் படிப்பு மீது தீராக் காதல் கொண்ட அவர், தனது சலூன்கடையில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளார். பேச்சாளர்களின் சொற்பொழிவு, பாரதியார் கவிதைகள், வரலாறு, அரசியல் மற்றும் சட்டம் குறித்து புத்தகங்கள் என வாங்கி அடுக்கி உள்ளார். இதை படிப்பதற்காகவே கடைக்கும் வரும் சில வாடிக்கையாளர்கள், புத்தகத்தை எடுத்து படிப்பதோடு மட்டுமின்றி, பொன்மாரியப்பனின் வித்தியாசமான இந்த முயற்சியை வெகுவாக பாராட்டி செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்