கும்கிகளுக்கு டிமிக்கி கொடுத்த சின்னதம்பி

சின்னதம்பி யானையை விரட்டச் சென்ற, கும்கிகள் திடீரென மிரண்டு ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
x
கண்ணாடிபுத்தூரில், கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சின்னதம்பி யானை, அங்கு கும்கி யானைகள் நின்று கொண்டிருப்பதை பார்த்தது. உஷரான சின்னதம்பி யானை பயந்தவாறு மீண்டும் கரும்பு தோட்டத்திற்குள் ஓடி டிமிக்கி கொடுத்தது. அதேசமயம், கும்கி யானை மாரியப்பன், திடீரென மிரண்டு எதிர் திசையில் ஒட, கலீம் யானையும் பின்தொடர்ந்து ஒடியது. சமார்த்தியமாக செயல்பட்ட பாகன்கள், சில அடி தூரம் வரை ஓடவிட்டு, பின்பு அவற்றை கட்டுப்படுத்தினர். பின்னர், அங்கிருந்த பாசன வாய்க்காலில் கும்கியானைகளை இறங்கி குளிப்பாட்டி தண்ணீர் குடிக்க வைத்து சாந்தப்படுத்தினர். இதனை தொடர்ந்து, சின்னதம்பி மிகவும் நட்புடன் பழகிய, கலீம் யானையை வைத்து, அதை அடர்ந்த காட்டிற்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்