திருபுவனம் கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரம் : இயக்குனர்கள் பதவியேற்க இடைக்கால தடை

தேர்தல் இன்றி தேர்வு செய்யப்பட்ட, தஞ்சை திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க இயக்குனர்களின் பதவியேற்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
திருபுவனம் கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரம் : இயக்குனர்கள் பதவியேற்க இடைக்கால தடை
x
தேர்தல் இன்றி தேர்வு செய்யப்பட்ட, தஞ்சை திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க இயக்குனர்களின் பதவியேற்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் இன்றி இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்ட 7 பேரும், பதவியேற்கக் கூடாது என்றும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், எந்த விதமான மேல்- நடவடிக்கைகளிலும் இயக்குனர்கள் ஈடுபடக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள், மாவட்ட கூட்டுறவு தேர்தல் அலுவலர், பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்