திருபுவனம் கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரம் : இயக்குனர்கள் பதவியேற்க இடைக்கால தடை
தேர்தல் இன்றி தேர்வு செய்யப்பட்ட, தஞ்சை திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க இயக்குனர்களின் பதவியேற்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தேர்தல் இன்றி தேர்வு செய்யப்பட்ட, தஞ்சை திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க இயக்குனர்களின் பதவியேற்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் இன்றி இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்ட 7 பேரும், பதவியேற்கக் கூடாது என்றும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், எந்த விதமான மேல்- நடவடிக்கைகளிலும் இயக்குனர்கள் ஈடுபடக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள், மாவட்ட கூட்டுறவு தேர்தல் அலுவலர், பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Next Story