ஆபத்தான கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில் அங்கன்வாடி மையம் இயங்கி வரும் கட்டிடம் சேதமடைந்துள்ளது.
ஆபத்தான கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே  தீவட்டிப்பட்டியில் அங்கன்வாடி மையம் இயங்கி வரும் கட்டிடம் சேதமடைந்துள்ளது. அதன்  மேற்கூரை ஓடுகள் பெயர்ந்து விழுவதால் அங்கு படிக்கும் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். வேறு கட்டிடத்திற்கு அங்கன்வாடி மையத்தை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே அங்கன் வாடி மையம் இயங்கி வந்த கட்டிடத்தை அதே  பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்