திருச்சி : எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனத்தில் கொள்ளை
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனத்தின் பூட்டை அறுத்து 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் கணினியை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களுடன் வந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளையடிக்க வந்த மர்மநபர்கள் சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்து விட்டு சில கம்யூட்டர் பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் மது அருந்தி விட்டு பாட்டிலையும் உடைத்து விட்டு சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story