ரூ.500 கோடி பணம், நகை மோசடி - நகைக் கடை உரிமையாளர் தலைமறைவு

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த, நகைக்கடை உரிமையாளர் ஒருவர் பொதுமக்களிடம் வசூலித்த 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
ரூ.500 கோடி பணம், நகை மோசடி - நகைக் கடை உரிமையாளர் தலைமறைவு
x
ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம், மேட்டூர், கோவை என பல இடங்களில் நகை கடை நடத்தி வந்த குறிஞ்சிநாதன் என்பவர், தங்களின் நகைக்கடையில் முதலீடு செய்தால் ஒரே மாத‌த்தில் 30 சதவீதம் கூடுதல் பணம் தருவதாக கூறி, மக்களிடம் பணம் வசூலித்துள்ளார். அவர் அமைச்சருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நம்பி, பொதுமக்களும் 1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில், நகைக்கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன், குறிஞ்சி நாதன் திடீரென தலைமறைவாகியுள்ளார். இதனால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்