இயற்கை உபாதைக்காக நிறுத்தாமல் சென்றதால் பேருந்திலிருந்து குதித்த பெண்...
பேருந்திலிருந்து குதித்த பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடையன்குளம் பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்து மூலம் வந்த போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக பேருந்தை நிறுத்தும் படி கூறியுள்ளார். பல முறை ஒட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பேருந்தை நிறுத்தும்படி தெரிவித்தும் பேருந்து நிற்காததால் பாண்டியம்மாள் பேருந்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story