லாரி- வேன் நேருக்கு நேர் மோதி விபத்து : வேன் ஓட்டுநர் உட்பட 6 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
லாரி-  வேன் நேருக்கு நேர்  மோதி விபத்து : வேன் ஓட்டுநர் உட்பட 6 பேர் பலி
x
காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல்  கிராமத்தை சேர்ந்தவர்கள், செய்யாறில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்க வேனில் சென்றுள்ளனர். செய்யாறு, காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள தும்பை கிராமம் அருகே வேன் சென்றபோது, வேலூரில் இருந்து செங்கல் ஏற்றி வந்த லாரி ஒன்று வேகமாக மோதியது.  

இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  வேன் ஓட்டுநர் மணிகன்டன் உயிரிழந்தார். இந்த விபத்தில், 31 பேர் படுகாயங்களு​டன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில், 7 பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 


Next Story

மேலும் செய்திகள்