போராட்டத்தை புறக்கணித்த தொமுச : போராடி பணிக்கு சென்ற தொழிலாளர்கள்

தொமுசவை சேர்ந்த பணியாளர்கள், போராட்டத்தில் கலந்துகொள்ளாமல், பணிக்கு செல்வதற்காகவே, புதிதாக மற்றொரு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
போராட்டத்தை புறக்கணித்த தொமுச : போராடி பணிக்கு சென்ற தொழிலாளர்கள்
x
தொமுசவை சேர்ந்த பணியாளர்கள், போராட்டத்தில் கலந்துகொள்ளாமல், பணிக்கு செல்வதற்காகவே, புதிதாக மற்றொரு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதுகாப்பு துறைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆவடியில் பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், திமுக தொழிற்சங்கத்தினர், இந்த போராட்டத்தில் பங்கேற்காமல், பணிக்கு செல்ல தங்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், போராட்டக்கார‌ர்கள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, தொமுச தொழிற்சங்கத்தினரை பணிக்கு செல்ல அனுமதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்