15 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - 18 வயதான மீனவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சென்னையில் 15 வயதான சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்த மீனவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியை காணவில்லை என கூறி அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு சிறுமி வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த சுந்தரேசன் என்ற 18 வயதான மீனவர் தன்னை கடத்திச் சென்று காஞ்சிபுரத்தில் நண்பர் வீட்டில் தங்க வைத்து பாலியல் வன்முறை செய்ததாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் மீனவர் சுந்தரேசனை கைது செய்த காசிமேடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story