மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை

மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை
மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை
x
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இதில், விரிவான திட்ட அறிக்கை  தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்துள்ள அனுமதிக்கு தடை கோரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு, மனுக்களைத் தாக்கல் செய்தன. மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக, தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்தது. அணை தொடர்பான, விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்தின் திட்ட ஆய்வு நிறுவனத்தின் தலைமைப் பொறியாளருக்கு, கர்நாடக நீர்வளத் துறையின் முதன்மைச் செயலாளர், கடந்த 18-ஆம் தேதி அளித்தார். உச்ச நீதி மன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது. இந் நிலையில், மேக தாது விவகாரம் தொடர்பான மனுக்கள் இன்று விசாரிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்