மதுபோதையில், தம்பியை கொன்ற அண்ணன்

தாய் மற்றும் மனைவியை தவறாக பேசியதாக மதுபாட்டிலால் தம்பியை அண்ணனே குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில், தம்பியை கொன்ற அண்ணன்
x
திருப்பூர் செல்லம்நகரில் தாய், தந்தை மற்றும் திருமணமான அண்ணன் ஆகியோருடன் விக்னேஷ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில், தாயை திட்டியதாக அண்ணன் பிரகாஷ் தம்பியை அடித்துள்ளார். இதனால், வீட்டில் இருந்து வெளியேறிய தம்பி விக்னேஷ் வீடு திரும்பவில்லை. அவரை காணவில்லை என பெற்றோர் மற்றும் பிரகாஷ் போலீஸில் புகாரளித்தனர். இதில், குளக்கரையில் கிடந்த  விக்னேசின் உடலைக் கைப்பற்றிய போலிசார், சந்தேகத்தின் பேரில் பிரகாஷிடம் விசாரித்தனர்.   இதில், சம்பவத்தன்று தம்பியுடன் பிரகாஷ் மது அருந்தியதும், அப்போது, தாய் மற்றும் மனைவியை தம்பி திட்டியதால், மது பாட்டிலால் அடித்து கழுத்தை அறுத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். அண்ணனே மது போதையில் தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்