நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி

திருவாரூரில் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி
x
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவு உள்ளிட்ட  பணிகளில் பலர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவத்துறையில் நிரந்தர 
வேலை வாங்கி தருவதாக கூறி 62 பேரிடம் பணம் வசூலித்து 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகாராத்துறையில் பணிபுரியும் ஓட்டுநர், மருந்தாளுநர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கூட்டுசதி பணமோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்