தனி ஒருவன்-2 கதை தயாராக உள்ளது - இயக்குநர் மோகன் ராஜா

தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
x
தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், சர்வதேச குறும்பட விழா இன்று தொடங்கியது. இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  துவக்கி வைத்தார். பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் நடக்கும் இந்த குறும்பட விழா தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. இதில் 197 குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் கலந்து  கொண்ட பிறகு பேசிய இயக்குநர் மோகன் ராஜா, தனி ஒருவன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றார். மேலும், ஒரு புதிய படத்தை தான் இயக்குவதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்