"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது"
அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
முன்னதாக கோவில்பட்டியில்  வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி,  தமது தலைமையிலான அரசு 10 நாட்கள் தாக்குப்பிடிக்குமா என  சிலர் நினைத்த நிலையில், 2 ஆண்டுகளாக ஆட்சி  நடந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். பஞ்சாலகுறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை புதுப்பிக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், உமறு புலவர் பிறந்த நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாமரனையும் படிக்க வைத்த தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனாரின்  மணிமண்டப பணிகள் திருச்செந்தூரில் விரைந்து நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்