தைப்பூச விழாவை முன்னிட்டு தேரோட்டம் - தேர்களை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்
நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட பழங்கள் பக்தர்களுக்கு சூறை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் சொர்ண காளீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர் பெருமான் சகடையில் எழுந்தருள சிறுவர்கள் உற்சாகமாக வடம் பிடித்து சென்றனர். சிறிய தேரில் எழுந்தருளிய சொர்ணவள்ளி தாயாரை பெண்களும், பெரிய தேரில் எழுந்தருளிய சொர்ணவள்ளி தாயார் மற்றும் சொர்ணகாளீஸ்வரர் சுவாமிகளை ஆண்களும் வடம்பிடித்து இழுத்தனர். தேர் நிலையை அடைந்ததும் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட பழங்கள் பக்தர்களுக்கு சூறை வீசப்பட்டது.
Next Story