பேருந்துடன் இரண்டு வேன்கள் மோதல் : 2 பெண்கள் பலி - 30 பேருக்கு சிகிச்சை

திண்டுக்கல் அருகே அரசுப் பேருந்தும், பக்தர்கள் வந்த 2 வேன்களும் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
பேருந்துடன் இரண்டு வேன்கள் மோதல் : 2 பெண்கள் பலி - 30 பேருக்கு சிகிச்சை
x
திண்டுக்கல் அருகே அரசுப் பேருந்தும், பக்தர்கள் வந்த 2 வேன்களும் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையைச் சேர்ந்த பக்தர்கள், பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு 2 வேன்களில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ராஜக்கப்பட்டி அருகே வந்தபோது, எதிரே வந்த திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்து மீது அடுத்தடுத்து மோதின. இதில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், வேனில் இருந்த பக்தர் பத்மா, பேருந்தில் இருந்த தங்கம்மா பீபி ஆகிய இரு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்