நாடாளுமன்ற உறுப்பினர்கள் எளிமையாக இருக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை
திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் வேண்டுகோள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக் கொண்டுள்ளார். சொகுசு காரில் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல என்று கூறியவர், நான், எம்.பி., யாக இருந்தபோது, சிறிய காரில்தான் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தேன் என்றும், எளிமையாக இருந்து சேவையாற்ற வேண்டும் என்றும் கூறினார். அமெரிக்காவில், செனட் உறுப்பினர்கள், சொந்த பிரச்சினைகளை பேசாமல், கொள்கைகளை உருவாக்குவது போல, இந்தியாவிலும் நாடாளுமன்றத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டவர், அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்ல உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Next Story