தந்தைக்காக மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட பாச மகன்

சென்னையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் தந்தையின் மீதான பாசம் காரணமாக மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட மகன் அவரிடம் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தைக்காக மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட பாச மகன்
x
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் சுதேஷ். இவரது மகன் சதீஷ் அதே பகுதியை சேர்ந்த சித்ரா என்ற காதலித்து வந்த நிலையில் 
இவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சுதேஷ் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 2 கால்கள் அகற்றப்பட்டன. மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்த நிலையில் தன் தந்தைக்கு ஏதும் ஆகிவிடுமோ என அச்சமடைந்தார் சதீஷ். தன் தந்தையின் ஆசியுடன் தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என விரும்பயி சதீஷ், சித்ராவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்த சுதேஷிடம் புதுமணத் தம்பதிகள் ஆசி பெற்றனர். தந்தை மீதான பாசத்திற்கு உதாரணமாக மகன் செய்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்