எழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை : கிளர்க் கைது - ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, எழுமலை பேரூராட்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் நேற்று சோதனை நடத்தினார்கள்.
எழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை : கிளர்க் கைது - ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்
x
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, எழுமலை பேரூராட்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் நேற்று சோதனை நடத்தினார்கள். சார்பதிவாளர் கிருஷ்ணம்மாள், நேற்று விடுமுறை என்பதால் இந்த அலுவலகத்தில் பணிபுரியும் கிளர்க் ராஜ்குமார் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை குழுவினர் நேற்று இரவு 7.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்,  கிளர்க் ராஜ்குமாரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்