மறுமணம் செய்ய மறுத்த விதவை பெண் மீது ஆசிட் வீச்சு

நாகர்கோவில் அருகே மறுமணம் செய்ய மறுத்த விதவைப் பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய நபர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மறுமணம் செய்ய மறுத்த விதவை பெண் மீது ஆசிட் வீச்சு
x
நாகர்கோவில் அருகே மறுமணம் செய்ய மறுத்த விதவைப் பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய நபர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிரிஜா. இவரது கணவர் இறந்த நிலையில் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் ஜான் ரோஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கிரிஜாவிடம் நெருங்கிப் பழகிய ஜான் ரோஸ் அவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய விருப்பமில்லாத கிரிஜா, ஜான் ரோஸ் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கிரிஜாவின் முகத்தில் வீசினார். இதையடுத்து அருகே உள்ள தோட்டத்திற்கு சென்ற ஜான்ரோஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து  கொண்டார். ஆசிட் தாக்குதலுக்கு ஆளான கிரிஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது. 



Next Story

மேலும் செய்திகள்