அகில இந்திய கபடி போட்டி : மும்பை அணியை வீழ்த்திய தமிழக அணி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மூன்றாவது நாளாக அகில இந்திய கபடி போட்டி நடைபெற்றுவருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மூன்றாவது நாளாக அகில இந்திய கபடி போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து பல மாநிலங்களை சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்று மோதி வருகின்றன. மூன்றாம் நாள் ஆட்டத்தை திரைப்பட நடிகை இந்துஜா தொடங்கி வைத்தார். இதில், முதல் ஆட்டத்தில், தமிழக போலீஸ் அணி, மும்பை அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில், திருச்செங்கோடு அணி அரியானா அணியிடம் வீழ்ந்தது. இதே போல, பெண்களுக்கான முதல் போட்டியில், ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் வெற்றி பெற்றன.
Next Story