"சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும்" - கமல்ஹாசன்

சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
x
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக சான்றோன் விருது வழங்கும் விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது.  அந்நகரின் வளர்ச்சிக்கும், மருத்துவம், விவசாயம், கல்வி, தொழிலில் சிறந்து விளங்கிய 12 பேருக்கு 'மக்கள் நீதி மய்யம்' கட்சி தலைவர் கமல்ஹாசன் சான்றோன் விருதுகளை வழங்கினார். அப்போது பேசிய கமல்ஹாசன்,  சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்றும்,  ஏழைகள் வள்ளலாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்