பலாத்கார நோக்கில் வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் : காப்பாற்ற வந்த போலீசை தாக்கியதில் காவலர் காயம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் நள்ளிரவில் வீடு ஒன்றில் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த தாயையும், மகளையும் பாலாத்காரம் செய்ய முயன்றது
பலாத்கார நோக்கில் வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் : காப்பாற்ற வந்த போலீசை தாக்கியதில் காவலர் காயம்
x
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் நள்ளிரவில் வீடு ஒன்றில் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த  தாயையும், மகளையும் பாலாத்காரம் செய்ய முயன்றது. வீட்டுக்குள்ளிருந்து உதவிகுரல் கேட்கவும், அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததுடன், போலீசுக்கும் தகவல் அளித்துள்ளனர். போலீஸார் வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தபோது, அந்த கும்பல் இரும்பு கம்பியால் தலைமைக் காவலரை தாக்கிவிட்டு ஓட முயன்றது. அப்போது கும்பலில் இருவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தப்பிச் சென்ற இரண்டு பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்