கோவில் விழாவில் சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்

நெல்லை மாவட்டம் பணகுடியில் கோயில் திருவிழாவில் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவில் விழாவில் சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்
x
நெல்லை மாவட்டம் பணகுடியில் கோயில் திருவிழாவில் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  பணகுடி ராமலிங்க சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவின் 3 ஆம் நாளான இன்று, சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாஸ்கராபுரத்தை சோந்தவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதனை கேட்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ் பிரேம்லாலை, ஒரு கும்பல்  தாக்கியுள்ளது. படுகாயமடைந்த ஜார்ஜ் பிரேம்லால் பணகுடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், சுப்பிரமணியன், சூர்யா, பாலன், அஜித் ஆகிய 4  பேரை பணகுடி போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய சேகர், சங்கர் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்