மஞ்சள் கொத்து அறுவடைப் பணிகள் தீவிரம்

பொங்கலுக்காக சாகுபடி செய்யும் விவசாயிகள்
மஞ்சள் கொத்து அறுவடைப் பணிகள் தீவிரம்
x
பொங்கல் பண்டிகைக்கு இரண்டு  நாட்களே உள்ள நிலையில் மஞ்சள் கொத்துகளை அறுவடை செய்யும் பணியில்  பரமக்குடி மஞ்சள்பட்டினம் பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி நகராட்சியின் 1வது வார்டான மஞ்சள்பட்டினத்தில் பல வருடங்களாகவே மக்கள் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். வைகை ஆற்றின் கரையில் இந்த பகுதி அமைந்துள்ளதால் மஞ்சள் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மஞ்சள் சாகுபடி  முடிந்ததும் கீரை, தக்காளி உள்ளிட்ட சாகுபடி செய்வதாகவும் குறிப்பிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்