பொங்கல் பண்டிகை : ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

பொங்கல் பண்டிகையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகை : ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி
x
பொங்கல் பண்டிகையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பட்டமங்களம், வைரவபுரம் , பாதரக்குடி கோட்டையூர் குன்றக்குடி, சிறாவயல் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தரை பாய்ச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. காளைகளுக்கு பருத்திக் கொட்டை, புண்ணாக்கு மற்றும் சத்துள்ள பொருட்கள் உணவாக வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு காளைகளை பிள்ளைகள் போல் வளர்த்து வருவதாக பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்