சென்னை : கொத்தடிமையாக விற்கப்பட்ட வாரணாசி சிறுவர்கள் 10 பேர் மீட்பு

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக விற்கப்பட்டதாக குழந்தைகள் அமைப்பினருக்கு புகார் வந்துள்ளது.
சென்னை : கொத்தடிமையாக விற்கப்பட்ட வாரணாசி சிறுவர்கள் 10 பேர்  மீட்பு
x
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக விற்கப்பட்டதாக குழந்தைகள் அமைப்பினருக்கு புகார் வந்துள்ளது. அந்த அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் சென்னை கொண்டித்தோப்பில் உள்ள முன்னாலால் என்பவரின் பானிப்பூரி தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்த ஜான்பூர் மாவட்டம் நிஷான்பூரை சேர்ந்த கோவிந்த்  மற்றும் ஜான்பூர், வாரணாசி, மாவட்டங்களைச் சேர்ந்த 9 குழந்தைகள் என மொத்தம் 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தலைமறைவான முன்னாலால் மகன், ராஹுல்லாலை போலீஸார் அழைத்து சென்று  விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் 9 பேரையும் ராயபுரம் அரசு சிறுவர்கள் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்