ரயிலில் குட்கா பொருட்கள் கடத்தல் : 483 கிலோ பறிமுதல் - போலீஸ் விசாரணை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
ரயிலில் குட்கா பொருட்கள் கடத்தல் : 483 கிலோ பறிமுதல் - போலீஸ் விசாரணை
x
ரயிலில் 8 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். 483 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் 4 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பார்சலை வாங்குவதற்காக யாரும் வராத நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்