"பிப்ரவரிக்குள் வகுப்பறைகள் கணினிமயம்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
அரசு பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பறைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கணினிமயமாக்கப்பட்டு, அவை இன்டர்நெட்டுடன் இணைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பறைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கணினிமயமாக்கப்பட்டு, அவை இன்டர்நெட்டுடன் இணைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 241 பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், இதனை தெரிவித்தார். தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணண் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story