செண்பகத்தோப்பு அணையை திறந்ததால் வெள்ளப் பெருக்கு : ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணை திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணை திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கமண்டல நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் மாணவ, மாணவிகள்,பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மக்களின் வசதியை கருத்தில் கொண்டு மேம்பாலம் அல்லது தரைப்பாலமாவது கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story