மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
x
நெல்லை டவுன் பகுதியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வகுப்பறையில் உள்ள மேசையை தட்டி விட்டதாக கூறப்படுகிறது. அப்போது வகுப்பில் இருந்த அறிவியல் ஆசிரியர் ஜோசப் செல்வின், அந்த மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக கூறப்படுகிறது. சக மாணவிகள் முன்னிலையில் அடித்ததால் மனமுடைந்த மாணவி வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிக்கு சென்ற பெற்றோர், ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் பெற்றோர் அளித்த புகாரின்  பேரில் ஆசிரியர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்