ரயிலில் இருந்து கீழே விழுந்த ரூ.36,76,000 கருவூலம் செல்கிறது
பரமக்குடி அருகே முதுகுளத்தூர் ரயில்வே கேட் பகுதியில் 36 லட்சம் ரூபாயுடன் தவறி விழுந்த பணப்பை மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பரமக்குடி அருகே முதுகுளத்தூர் ரயில்வே கேட் பகுதியில் 36 லட்சம் ரூபாயுடன் தவறி விழுந்த பணப்பை மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் சென்ற பயணி ஒருவரின் பணப்பை தவறி விழுந்துள்ளது. இதை எடுத்த ஆசிரியர் ஒருவர் அருகில் உள்ள தேநீர் கடையில் கொடுத்துள்ளார். பணத்தை காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றபோது, அங்கு வந்த நபர் ஒருவர், அது தன்னுடையது என்று வாதம் செய்தார். அவர் கூறிய தகவல் சரியாக இல்லாததால் போலீசார் தர மறுத்துவிட்டனர். பணத்துக்கு உரியவரை கண்டுபிடிக்க முடியாததாலும், ஆதாரங்களுடன் இதுவரை யாரும் வராததாலும், 37 லட்சம் ரூபாயும் கருவூலத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.
Next Story