புதுச்சேரி : சீனிவாசபெருமாள் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புதுச்சேரியில் உள்ள வன்னியபெருமாள் கோவிலில் ஸ்ரீநிவாசபெருமாளுக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது.
புதுச்சேரி : சீனிவாசபெருமாள் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
புதுச்சேரியில் உள்ள வன்னியபெருமாள் கோவிலில் ஸ்ரீநிவாசபெருமாளுக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது. இதை ஒட்டி, உற்சவ மண்டபத்தில் ஸ்ரீநிவாசபெருமாளும், ஆண்டாள் நாச்சியாரும் மலர்கள் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோவிலில் கூடார வள்ளி விழா : 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, மோகனூரில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் கூடார வள்ளி விழா நடைபெற்றது. எம்பெருமான் மற்றும் ஆண்டாளுக்கு மாலை சாற்றி வழிபடும் நிகழ்வை  ஏராளமான பக்தர்கள் கண்டு வணங்கி சென்றனர்.

சாரங்கபாணி கோவிலில் தை பிரம்மோற்சவ விழா : 

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில், தை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம்நாளில், புகழ் பெற்ற அனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நான்கு வீதிகளில் வலம் வந்த  சாரங்கபாணி பெருமாளுக்கு பட்டாச்சாரியார்கள் ஆழ்வார்களின் பாசுரங்களை பாடி வணங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்