தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்

தேனி மாவட்டம் வீரபாண்டியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்
x
சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா : அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு 

தேனி மாவட்டம் வீரபாண்டியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா கொண்டாடப்பட்டது. கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் நடைபெற்ற இந்த விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். புதுப்பானை வைத்து பொங்கலிடுவதை பார்த்து ரசித்த அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய நடனங்களை கண்டு மகிழ்ந்தனர்.  தமிழர்களின் பண்பாடும் கலாசாரமும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர். 

தமிழ்நாடு சிறப்பு காவல் படை சார்பில் பொங்கல் விழா : 

தமிழ்நாடு சிறப்பு காவல் படை சார்பில் பொங்கல் விழா சென்னை ஆவடியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன், பொங்கல் பானையில் அரிசியிட்டு விழாவை தொடக்கி வைத்தார். விழாவில், காவலர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய டி.கே.ராஜேந்திரன், காவல்துறையினர், பண்டிகைகளை கொண்டாடாமல், பணி செய்வதை பெருமையாக கருத வேண்டும் என்றார். 
 



Next Story

மேலும் செய்திகள்