மாற்று முறை மருத்துவம் என்ற பெயரில் போலி பல்கலைக்கழகம்

நாகை மாவட்டத்தில் மாற்று முறை மருத்துவம் என்ற பெயரில் போலியாக திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்தி வந்தது தெரியவந்ததையடுத்து அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர்.
மாற்று முறை மருத்துவம் என்ற பெயரில் போலி பல்கலைக்கழகம்
x
நாகை மாவட்டம் குத்தாலத்தில் போலியாக அகில உலக திறந்தவெளி மாற்று மருத்துவம் என்ற பல்கலைக்கழகத்தை செல்வராஜ் என்பவர் நடத்தி வந்துள்ளார். கடந்த 12 வருடங்களாக இயங்கி வந்த இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போலி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த ஊரக நலத்துறை இயக்குனரக   அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு ஏராளமான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள்  இருந்த நிலையில் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், போலி பல்கலைக்கழகத்திற்கு சீல் வைத்தனர். இதனை நடத்தி வந்த செல்வராஜ் தலைமறைவான நிலையில் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்