யானைகளுக்கு சர்க்கரை அளவு பரிசோதனை

மேட்டுப்பாளையம் யானைகள் முகாமில், யானைகளுக்கு சர்க்கரை அளவு பரிசோதனை நடைபெற்றது.
யானைகளுக்கு சர்க்கரை அளவு பரிசோதனை
x
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில், யானைகள் முகாம் நடைபெற்ற வருகிறது. தமிழக கோவில்களின் யானைகள் உட்பட 28 யானைகள், முகாமில் உள்ளன. அவற்றின் ரத்தத்தில் உள்ளசர்க்கரை அளவை கண்டறிவதற்காக ரத்த பரிசோதனை நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், ரத்தத்தை சேகரித்து, கோவை அரசு கால்நடை நோய் புலனாய்வு பிரிவு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். ரத்த பரிசோதனை அறிக்கை அடிப்படையில், யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்