வகுப்பறையில் நாய்க்குட்டியுடன் பாடம் நடத்திய ஆசிரியை

சென்னையில் வகுப்பறையில் நாய்க்குட்டியுடன் ஆசிரியை பாடம் நடத்தியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வகுப்பறையில் நாய்க்குட்டியுடன் பாடம் நடத்திய ஆசிரியை
x
சென்னையில் வகுப்பறையில் நாய்க்குட்டியுடன் ஆசிரியை பாடம் நடத்தியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தாளாளராக இருக்கும் ஆசிரியை தனது செல்லப்பிராணியை வகுப்பில் வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார். இதுதொடர்பான காட்சி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்