பட்டினியால் சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டி : உணவு வாங்கி கொடுத்து உபசரித்த பெண் ஆய்வாளர்

சென்னையை சேர்ந்த பவுனம்மாள் என்ற 80 வயது மூதாட்டி பிள்ளைகளால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
பட்டினியால் சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டி : உணவு வாங்கி கொடுத்து உபசரித்த பெண் ஆய்வாளர்
x
சென்னையை சேர்ந்த பவுனம்மாள் என்ற 80 வயது மூதாட்டி பிள்ளைகளால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. மகன் மற்றும் மகளின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய அப்பெண் 3 நாட்கள் சாப்பிடாமல் சாலையோரம் மயங்கி கிடந்துள்ளார். இது குறித்து பொது மக்கள் மூலம் தகவலறிந்த ஓட்டேரி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஸ்ரீதேவி, பவுனம்மாளை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தார். அம்மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்த ஸ்ரீதேவி, சாப்பிட மறுத்த பவுனம்மாளுக்கு ஊட்டியும் விட்டுள்ளர். பின்னர் மூதாட்டியின் விருப்பப்படி அவரை முதியோர் இல்லத்தில் ஸ்ரீதேவி சேர்த்துள்ளனர். காவல் பெண் ஆய்வாளரின் மனிதநேய உதவிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்