பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழா...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழா...
x
கடந்த மாதம் 27-ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.  முக்கிய நிகழ்ச்சியான தீக்குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.  முதலில் கோயில் தலைமை பூசாரி கந்தவேல் தீக்குண்டம் இறங்கி  நிகழ்சியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி  நேர்த்திக்கடன் செலுத்தினர். 11-ம் தேதி திருத்தேரோடமும் 12-ம் தேதி முத்துபல்லக்கு உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13-ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும், 19-ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்