எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி...

எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி...
x
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் நினைவாக, சென்னை மெரினா கடற்கரை சாலையில் 2 கோடியே 52 லட்ச ரூபாய் செலவில் நினைவு வளைவு கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தடை கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் ஆனால் திறப்பு விழா நடத்த கூடாது என தடை விதித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வளைவை திறக்க அனுமதிக்குமாறு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, நினைவு வளைவு மீதுள்ள திரைகளை அகற்றி, திறக்க அனுமதித்த நீதிபதிகள், விழா ஏதும் நடத்தக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்