சாலையை கடந்த 45 காட்டு யானைகள் கூட்டம் - ஓட்டம் பிடித்த கிராம மக்கள்...
ஒசூரில் ஒரே நேரத்தில் 45 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்ததால், கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஒசூரில் ஒரே நேரத்தில் 45 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்ததால், கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சானமாவு வனப்பகுதியில் 60 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்ததால், கிராம மக்களுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கபட்டது. இந்நிலையில், இன்று காலையில் சானமாவு போடூர் வனப்பகுதிக்கு நாயக்கனப்பள்ளி கிராம சாலை வழியாக, காட்டு யானைகள் கடந்து சென்றன. இது அந்த பகுதி மக்களிடையே மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
Next Story