வேலூர் : காலாவதியான மாத்திரை பொதுமக்கள் அதிர்ச்சி..!

விற்பனைக்கு அனுப்ப பேக்கிங் செய்யும் ஆலை
வேலூர் : காலாவதியான மாத்திரை பொதுமக்கள் அதிர்ச்சி..!
x
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே செயல்படும் மாத்திரை தயாரிக்கும் ஆலையில், காலாவதியான மாத்திரைகளை மீண்டும் விற்பனைக்கு அனுப்ப பேக்கிங் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக மாத்திரைகள் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதுபற்றிக் கேட்ட தொழிலாளர்கள் சிலர் பணியை விட்டு நீக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் போலீஸார்  பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்