கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே தம்பதியர் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை
x
பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன், பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவருக்கும், லாவண்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தனது மனைவியுடன் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்