கண்கலங்கிய வைரமுத்து
கருணாநிதி பற்றி பேசும் பொழுது கண்கலங்கிய வைரமுத்து
திருப்பூர் வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய தமிழாற்றுப்படை நிகழ்ச்சி நடைபெற்றது. மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன், கனிமொழி எம்.பி., ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, கவிஞர்கள் தொடர்பான நூல்களை வெளியிடும் போது கருணாநிதி உடன் இருப்பார் என்றும், ஆனால் கருணாநிதி இல்லாமல் வெளியிடபடும் முதல் நூல் இந்த தமிழாற்றுப்படை நூல் என்றார் . அவரை தொடர்ந்து நிகழ்ச்சியில் கருணாநிதி பற்றி பேசிய வைரமுத்து போது கண் கலங்கினார்.
Next Story