பாதுகாப்பு வளையத்துக்குள் ரயில் நிலையங்கள் : ரயில் புறப்படும் 20 நிமிடங்களுக்கு முன்பே வர வேண்டும்

விமான நிலையங்கள் போல பயணிகள் பரிசோதனை
பாதுகாப்பு வளையத்துக்குள் ரயில் நிலையங்கள் : ரயில் புறப்படும் 20 நிமிடங்களுக்கு முன்பே வர வேண்டும்
x
விமான நிலையங்கள் போல ரயில் நிலையங்களையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர  இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. பயணிகள் பரிசோதனைகளை முடிப்பதற்கு வசதியாக ரயில் புறப்படும் 20 நிமிடங்களுக்கு முன்பே  ரயில் நிலையம் வந்துவிட வேண்டும் என்றும் இந்த புதிய பாதுகாப்பு முறைகள் நவீன கருவிகள் மூலம் நடக்கும் என்றும் ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் கூறியுள்ளார். இதற்காக ரயில் நிலையங்களை முழுவதுமான அடைப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறிய அவர் கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் பணிகள் நடந்து வருவதாகவும், மேலும்  202 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்