சாலை விபத்தில் 10 பேர் உயிரிழப்பு : காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல்

சாலை விபத்தில் 10 பேர் உயிரிழப்பு : காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல்
x
புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.விபத்தில் காயமடைந்து திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை
அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பகுதியில் விபத்து நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்