புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேன்,லாரி நேருக்கு நேர் மோதி 10 பேர் பலி

புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
x
ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 15 பேர், வேனில் சபரிமலை சென்றுவிட்டு, புதுக்கோட்டை வழியாக திரும்பி கொண்டிருந்தனர். திருமயம் அருகே எதிரே வந்த லாரி, எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. இதில் வேனில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 8 பேர் திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். எஞ்சிய  ஐந்து பேர், புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த விபத்து குறித்து, மாவட்ட ஆட்சியர் கணேஷ், எஸ்.பி. செல்வராஜ் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்